இறைவனால்
படைக்கப்பட்டது தான் இயற்கை.
இயற்கையை
படைப்பதும்,
அழிப்பதும்
அவன் செயல்.
இதில்
மனிதர்களாகிய நாம் குறுக்கிடுவது
எவ்வகையில் நியாயம்?
அப்படியே
நம் தேவைக்கு நாம் இயற்கையை
நாம் அழித்தாலும் பதிலுக்கு
இயற்கைக்கு ஏதேனும் நாம்
செய்கின்றோமா என்றால் அதுவும்
இல்லை. இதற்கு
முக்கியக் காரணம் நம்
அலட்சியப்போக்கு.
ஒரு
உதாரணத்திற்கு ஒரு கிராமத்தில்
தண்ணீர் குழாய் உடைந்து
தண்ணீர் வெளியேறுகிறது எனக்
கொண்டால் சம்பந்தப்பட்ட
தண்ணீர் வடிகால் வாரியம்
அதைக் காண்பதற்கான வாய்ப்பு
இருக்காது.
அவ்வாரியத்திற்கு
மக்கள் தான் தகவல் சொல்ல
வேண்டும். பின்
அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள்.
ஆக இதைத்
தான் நாங்கள் பொதுவாக
எடுத்துரைக்கிறோம்.
எங்கு பார்த்தாலும் மின்வெட்டு என்கிறார்கள். மின் வெட்டைப் பற்றி கவலைப்படும் நீங்கள் ஒரு நாளாவது மின்சாரத்தை சேமிக்க யோசித்ததுண்டா????????
- சமுதாயத்தைப் பாதுகாப்பதில் நமக்கும் தகுந்த அக்கறை வேண்டும்.
- நம் கடமைகளை சரிவர செய்து வந்தாலே நாட்டின் பல குறைகள் ஒழிந்துவிடும்.
- இறைவனால் அமைக்கப்பட்ட இயற்கை அன்னையைப் பாதுகாத்தல் நாட்டின் முதுகெழும்பான வேளாண்மையை மென்மேலும் செழிக்கச்செய்யும்.நன்றி!!!